எனக்கு மட்டும் ஏன்?
எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று நீ எண்ணிக் குமுறும் வலிகள் அனைத்தும், நீ எண்ணுவதை விட பலமடங்காக பல கோடிபேருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்த பூமியில். எப்போதும் சிரித்த முகமாகத் தென்படும் உனது நண்பர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் புதைந்து கிடக்கத்தான் செய்கிறது. இதுவல்லவோ வாழ்க்கை என்று நீ வியந்து பார்க்கும் எல்லோருக்குமே, நாம் ஏன் வாழ்கிறோம் என்ற விரக்தி அவ்வப்போது எட்டிப் பார்க்காமல் இருந்ததில்லை. இனி வாழவேண்டாமென்ற முடிவுக்கு உன்னைத் தள்ளிய…
மேதகு – ஒரு கண்ணோட்டம்
வழக்கமாக, திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை, எனக்கும் இந்த படத்துக்கும் தொடர்பே இல்லை என்பது போன்ற பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வார்த்தைகளை, ஒவ்வொரு திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். அதற்கு மாறாக “இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள், கதைக்களம், சம்பவங்கள் அனைத்துக்கும் படக்குழுவினரே பொறுப்பு” என்று முதல் திரையிலே நமது புருவங்களை உயரச்செய்த படக்குழுவினருக்கு பாராட்டுகள். தெருக்கூத்துக் கலைஞர்கள், தமிழினத்தலைவர் பிரபாகரனின் வரலாற்றைச் சொல்வதுபோல திரைப்படத்தை அமைத்திருப்பது மிகச்சிறப்பு. தெருக்கூத்து என்றாலே, ராமாயணம், மகாபாரதம் போன்ற வடக்கத்திய கதைகளை மட்டும் பெரும்பாலும்…
உன் வாக்கு ஒன்றே மாறுதல்
வந்தாரை வாழவைத்து நீமட்டும் வீழ்ந்தாய் – நம்தாய்மண்ணின் தமையர்தமை தரக்குறைவு செய்தாய் செய்ததெல்லாம் தவறென்று இன்றாவது உணர்வாய் – வீண்சாதிமத பேதம் விட்டு ஓரினமாய் இணைவாய் இணைந்த பின்பு இத்தரணியில் எதிரியேது உனக்கு – இனிபணிந்து நிற்கும் ஏழுலகும் தமிழர்தம் வாளுக்கு வாளெடுத்து வீழ்ந்ததில்லை என்றும் நம்மினமே – பெரும்தோளெடுத்து பொங்கியெழு பகைவர் அஞ்சிடவே அஞ்சுவதால் நாமடைந்த நன்மையேதும் இலையே – கண்துஞ்ச மறு தாய்நிலத்தின் விடுதலையைப் பெறவே பெற்ற மண்ணைப் பறிக்க வந்த பகைவரைக் கருவறுப்போம்…
நான்
நான் என்பது தனிமனிதனல்ல, சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயம் என்பது மக்கள்தொகையல்ல, அறவோர் வாழும் கூட்டமைப்பு. அறம் என்பது சட்டதிட்டமல்ல, மனதளவில் தூய்மையாய் வாழ்தல். மனம் என்பது மூளையின் பரிணாமமல்ல, ஐம்புலன்களின் கட்டுப்பாடு. ஐம்புலன்கள் என்பது சுகங்களை நுகர்வதற்கல்ல, இயற்கையின் இயல்பை உணர்ந்து போற்றுவதற்கு. இயற்கை என்பது நம் தலைமுறை மட்டும் வாழ்ந்து தீர்ப்பதற்கல்ல, வருங்காலத்தை வாழவைப்பது. வருங்காலம் என்பது கனவல்ல, நிகழ்காலத்தின் தொடர்ச்சி. நிகழ்காலம் என்பது நிகழ்வுகளின் தொகுப்பல்ல, சந்ததிகளின் தலையழுத்து. தலையெழுத்து என்பது விதிக்கப்பட்டதல்ல,…
மேதகு
அவர் காலடிகளில் காத்துக்கிடந்த பதவிகள் அத்தனை. நினைத்திருந்தால், உலகின் அனைத்துவித சுகங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து குவித்துவிடும் அளவுக்கு செல்வச்செழிப்போடு வாழ்ந்திருக்க முடியும். பெற்ற பிள்ளைகளை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்திருக்க முடியும். மனைவியோடும், பிள்ளைகளோடும் மாடமாளிகையில் காலம் கழித்திருக்க முடியும். ஆனால், காடுதான் பெரும்பாலும் அவருக்கு வீடாக இருந்தது. பிறந்த நாட்டின் விடுதலை நெருப்பு ஒன்றே அவர் நெஞ்சில் பற்றி எரிந்தது. முதுகுக்குப் பின்னால் இந்தியா என்ற மாபெரும் துரோகத்தை சுமந்து கொண்டு, முகத்துக்கு…
தமிழை மறந்த தமிழர்களுக்கு ஒரு கடிதம்
தமிழை மறந்து போன தமிழர்களுக்கு, பச்சைத்தமிழனின் கடிதம். மடல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த சிறு தயக்கம். ஏனென்றால், சங்க காலத்தில் மடலேறுதல் என்பது காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணிடம் ஊரறிய பகிரங்கமாக தனது காதலை சொல்வதற்கு பயன்படுத்தும் ஒரு செயல். அது ஐந்திணை ஒழுக்கத்தில் வராது, அதனால் மடல் என்பதை விட கடிதம் என்ற வார்த்தையைக் குறிப்பிட விரும்புகிறேன். இது தாய்த்தமிழை நேசிப்பவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமல்ல என்பதையும் பதிவு செய்கிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் யாரும் தமிழன் கட்டிய கோயிலில்,…
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – நான்கு
நான்கு நீங்கள் நாலும் தெரிந்தவரா? என்று ஒரு மனிதரின் அறிவுக்கு சவால் விடும் வேலையை நான்கு என்ற எண்தான் துவக்கி வைக்கிறது. கோடிக்கணக்கில் தெரிந்தவரா என்று கேட்டால் கூட, பல புத்தகங்களை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டவர் போலிருக்கிறது என்று நினைத்து ஆச்சர்யப்படலாம். எவ்வளவோ எண்கள் இருந்தும், ஏன் நாலும் தெரிந்தவரா என்று கேட்கிறார்கள்? இந்த கேள்விக்கு, நான்கு தொடர்பான தகவல்களைத் திரட்டும்போது மனதில் தோன்றிய பதிலை சொல்கிறேன். அந்த பதில் சரிதானா என்ற முடிவை உங்களிடமே…
தமிழர்களின் அடிமை வாழ்வு – பாகம் 2
முதல் பாகத்தின் தொடர்ச்சி தமிழர்கள் எவ்வாறு அடிமை செய்யப்பட்டார்கள் என்ற ஆய்வின் இரண்டாவது கட்டுரை இது. சங்ககாலம் முதல் பல்லவர்கள் நுழைவு வரை முதல் பாகத்தில் ஆராயப்பட்டது. இரண்டாம் பாகத்தில் ஆறாம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகள் ஆராயப்பட இருக்கின்றன. கிட்டத்தட்ட 1200 ஆண்டு வரலாற்றை சில பக்கங்களுக்குள் அடக்கி விட முடியுமா என்ற வியப்பு பலர் கண்முன்னே விரிந்து நிற்குமென்று நம்புகிறேன். ஆனால் தமிழர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்ட சில நிகழ்வுகளை…
ஏன் கடவுள்?
பெரியாரை விமர்சிப்போம் கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்! கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று பெரியார் சொன்னதை, பகுத்தறிவேயில்லாமல் ஏற்றுக்கொண்டு, பெரியாரைக் கடவுள் போலவே சித்தரிக்க முற்படும் ஒரு கூட்டம் இன்றும் தமிழகத்தில் உண்டு. கூடியவிரைவில் அந்தக்கூட்டம், கடவுள் ஈரோட்டில் பிறந்தார் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனக்கு பெரியார் மீது நிறைய நன்மதிப்பும் உண்டு, நிறைய விமர்சனங்களும் உண்டு. திருவள்ளுவரையே விமர்சனத்தோடு அணுகலாம் என்ற பார்வை கொண்ட தமிழகத்தில், பெரியாரை விமர்சனம் செய்தால்…
தமிழர்களின் அடிமை வரலாறு – பாகம் 1
வரலாறு தனது வரலாற்றை மறந்த இனம் வளமுடன் வாழாது. தாய்மொழியைத் துறந்த இனம் அடிமைப்பட்டுப் போகும். உலகில் அடிமைப்பட்டுக் கிடக்கும் எந்த ஒரு இனத்தின் பின்னனியை ஆராய்ந்து பார்த்தாலும், நமக்கு இரண்டு தகவல்கள் நிச்சயம் கிடைக்கும். ஒன்று, அந்த இனத்தின் தாய்மொழி அழிக்கப்பட்டிருக்கும், இன்னொன்று அவர்களின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் அந்த இனம் மெல்லமெல்ல அடிமைத்தளையில் சிக்குண்டு சீரழிந்து போகும். இதுபோன்ற சீரழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இனங்களில் ஒன்று தமிழினம். உலகின் பிற இனங்கள், விலங்குகளை வேட்டையாட கையில்…
வாக்குத் தவறானால்?
தனது வாழ்நாளில் அன்றுதான் கடைசிநாள் என்பதை உணராமல் அவன் நாட்டியத்தைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அவன் ரசிப்பது நாட்டியத்தையா அல்லது நடன மங்கைகளையா என்ற கோபம் அவன் மனைவிக்கு. தனிமையில் இருந்திருந்தால் தவறைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கலாம். ஆனால் நாடாளும் அரசனை அவை முன்னிலையில் எவ்வாறு கடிந்துகொள்வது? தான் கோபத்திலிருக்கிறேன் என்றுணர்த்த விருட்டென்று எழுந்து சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கோபப்பெருந்தேவி ஆனாள். அவள் விருட்டென்று போனதும் சுருக்கென்று புத்தியில் உரைத்தது அவனுக்கு. இல்லாளின் உள்ளம் குளிரச்செய்யும் வழியறியாது அரியணை என்னும்…
உணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)
மிருகம் பாதி மனிதன் பாதி அது அடர்ந்த காடு. புலிகளுக்கும், சிறுத்தைகளும் நடுவில் வாழ வேண்டிய கட்டாயம். பலம் மிக்க விலங்குகளுக்கிடையே, அந்த ஒரு விலங்குக்கூட்டம் மட்டும் பலவீனமாக சுற்றித் திரிந்தது. காட்டுக்குள் வேறெந்த விலங்குகளுக்கும் இல்லாத ஆபத்துகள் அனைத்தும் அந்த விலங்குக் கூட்டத்துக்குக் காத்திருந்தன. ஏன்? அந்த விலங்குக்கு, ஆபத்தென்றால் மான் போல மின்னல் வேகத்தில் ஓடத்தெரியாது, குரங்குகள் போல மரத்துக்கு மரம் துரிதமாகத் தாவத்தெரியாது. குரங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் பரிணாம…
தமிழர்களின் ஒற்றுமை
ஒற்றைப் புள்ளி மனிதகுல வரலாற்றில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான தடயங்கள் மிகக் குறைவு. இது தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வென்றாலும், அதுதான் உண்மை. தமிழர்களை எப்போதும் பிரித்து வைக்க சாதிமதங்கள் தன் பங்கைப் பெரிதாய் ஆற்றியிருக்கின்றன. இந்த கட்டுரையில் இரண்டு வரலாற்று சம்பந்தவங்களை அலசி அதன் பின்னணியில், எது தமிழர்களை இணைத்தது என்று ஆராய விழைகிறேன். இது போன்று தமிழர்கள் ஒன்றிணைந்த பிற தரவுகளை உற்றுநோக்கினாலும், தமிழர்களை இணைத்தது ஒரேயொரு புள்ளிதான் என்பது விளங்கும்….
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – மூன்று
மூன்றாம் இடம் நம் பூவுலகில் மூன்றாம் இடத்தைத் தவிர சிறப்பான இடமொன்று இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், சூரியக்குடும்பத்தில் நமது பூமியே மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆகையால் மூன்றாம் இடம் என்பது பூமியின் இடத்தைக் குறிக்கும். விளையாட்டிலோ, படிப்பிலோ மூன்றாம் இடம் கிடைத்தால் பூமியை ஒரு காரணம் சொல்லி மூன்றாம் இடம் பெற்றதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம். தமிழில் சிறுகவிதை முதல் பெரும் காவியம் வரை, துவக்கம் உலகை முன்னிறுத்தி அமைய வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அது…
சம்பிரதாயங்களும் சினிமாப் பாடல்களும்
நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று அனைத்துக்குமே நாம் சில சடங்குகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோம். அந்த சடங்குகள் வரிசையில் காலப்போக்கில் பல புதிய பழக்கங்கள் இணைந்துகொள்வது இயல்பு. அந்த வகையில் திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில், சில குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் இடம்பெறுவதுண்டு. எனது ஊர் முள்ளக்காடு, தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கிராமம். எனது கிராமத்தில், இது போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் சில பாடல்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எனது ஊரில் மட்டுமல்லாது, அந்த வட்டாரத்தில்…
தூத்துக்குடிக்காரன் காதல் கவிதை
பையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என் கையைப்பிடிச்சவளே… செரட்டயப்போல என் காதலையும் பொரட்டிப் போட்டவளே… அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே.. தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன.. ராசா மாதிரி ஊர சுத்த வச்சவளே… சென்னியப் பேத்தாலும் சும்மா இருந்தவன இன்னைக்கு வெண்ணியக் குடிக்க வச்சிட்டடி.. ஏல மக்கான்னு கூப்பிட்டவன எல்லாம் ஏம்ல இப்படின்னு பண்றான்னு கேக்க வச்ச.. கெழக்கால போற கெழடுகட்ட கூட வடக்காம போவயில வாயாற திட்ட வச்ச… பாம்பக் கண்டாலும் பயிராத…
பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்
1) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல. இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான் நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான் இந்தப் பழமொழி. “அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப்…
முப்பாட்டன் வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு
அறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய…