தொல்காப்பியத்தில் அறிவியல்

இலக்கணத்தையும் தாண்டி தொல்காப்பியம் இலக்கண நூல் என்பது உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. இலக்கணம் என்பதையும் தாண்டி வாழ்வியல், அறிவியல் போன்ற பல சமூக விதிகளைத் தொட்டிருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை. தொல்காப்பியம் காட்டும் அறிவியல் சிலவற்றை இங்கு கூற விரும்புகிறேன். அறிவியலுக்குள் நுழையும் முன்பு தொல்காப்பியம் குறித்து ஒரு சிறு முன்னுரை மட்டும். போரடிக்கும் முன் நிறுத்தி விடலாம். கவலை வேண்டாம். சுருக்கமாக விறு விறு தொல்காப்பியம் தொல்காப்பியம் மொத்தம் 3 அதிகாரங்களைக் கொண்டது. அதிகாரம் என்றால்…

மூன்று சாட்டைகள்

சாதிச்சேற்றில் நித்தம் உழன்று வீதிதோறும் சங்கம் வளர்த்த சாதியப்பேய்களுக்கு ஒரு சாட்டை. மதம் பிடித்து சமயம் பார்த்து பிற சமயம் அறுக்கத்துடிக்கும் மதயானைகளுக்கு ஒரு சாட்டை. ஊர்ப்பணத்தை ஏய்த்துத் தின்று ஊன் வளர்க்கும் அரசியல்பேதிகளுக்கு ஒரு சாட்டை. இந்த மூன்று சாக்கடைகளில் நம் கால்பட நேர்ந்தாலும் நம்மையும் தோலுரிக்கட்டும் இந்த சாட்டை.

Corporate தாய்

ஆயா முகத்தில் நீ கண்விழிக்க… அலுவலக வாசலில் நான் இருப்பேன்… தூக்கி உனைக்கொஞ்சிட கனவுடன் நான் வருவேன்… தூக்கத்திற்கு இரவில் அழுது கொண்டு நீ இருப்பாய்…. உறங்கும் நேரம் மட்டும் உனை நான் ரசிக்கிறேன்… உன்விழிகள் கலங்கும்போது கைப்பேசியில் தாலாட்டுகிறேன்… தேம்பி அழ தாய்மடி என்றும் கிடைத்தது எனக்கு… தாய்ப்பாலும் புட்டிப்பாலாய் மாறிப்போனது உனக்கு… தவறி நான் விழுந்துவிட்டால் பதறிப்போய் வாரியணைப்பாள் என் அன்னை… முதல் அடி எடுத்து நீ வைத்ததை புகைப்படத்தில் நான் பார்த்தேன் உன்னை……

வலைத்தளத்தில் விசைப்பலகையின் முதல் பக்கம்

உலகின் முதல் உயிருக்கு என்றைக்கு செவிகள் பிறந்ததோ அன்றே மொழியின் முதற்கூறு மூளையில் உருவாகியிருக்க வேண்டும். காதில் கேட்ட ஒலியை வாயால் கூற முயற்சித்தது மிருகங்களின் சத்தமாகவோ பறவைகளின் சத்தமாகவோதான் இருக்க வேண்டும். எதிரில் இருக்கும்போது சுட்டிக்காட்ட விரல்கள் போதுமானது. அதனைக் கண்டிராத ஒருவனுக்கு விளக்க வேண்டியத் தேவை வரும்போது சித்திரம் தேவைப்படுகிறது. அன்றுதான் எழுத்தின் முதல் அச்சு பதிக்கப்பட்டிருக்க வேண்டும். மொழி ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. அந்த ஆதிமனிதன் வரைந்த முதல் சித்திரம்தான் உலகின் மொழிகளுக்கெல்லாம்…

திராவிடம் என்னும் சங்கேதம்

சங்கேதம் சில வார்த்தைகளோ, சொற்றொடரோ பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள். அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும். அதுபோன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான். எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல, வரலாற்றில் சில முடிச்சுகள், உண்மையைத் திரித்து, மறைத்து விடுவதுண்டு. இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும். அதை…

ஓர் இனத்தின் அடையாளம்

சோமாதேவி டூரா, மேரி ஸ்மித் ஜோன்ஸ், டாமி ஜார்ஜ், டாலி பென்ட்ரீத். நாம் வாழ்நாளில் கேட்டறியாத பெயர்கள் இவை. இவர்கள் அனைவரும் சில இனங்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். கடைசி அடையாளங்கள். இவர்கள் அனைவரும் அழிந்துபோன சில மொழிகளைப் பேசிய கடைசி மனிதர்கள். அவர்களுக்கு வாரிசே இல்லை என்று அர்த்தம் அல்ல. அந்த வாரிசுகளுக்கு அவர்கள் தாய்மொழி தெரியவில்லை என்று அர்த்தம். ஒட்டுமொத்த உலக மக்களையும் டி.என்.ஏ, நிறம், உருவம், மதம் போன்ற…