அளந்து வைத்த உயரம்… ஆர்ப்பரிக்கும் அழகு… திரும்பிப் பார்க்கத் தோன்றும் பரவசம்… இவை பூங்காவில் வளர்க்கப்பட்ட செடிகள்… கண்ணைப் பறிக்கும் கைப்பேசி… உள்ளம் கவரும் உடைகள்.. எல்லாத் துறைகளையும் எட்டிப்பார்க்க வைக்கும் மிடுக்கு… நுனிநாக்கு ஆங்கிலம்… இவர் மென்பொருள் பொறியாளர்… பூங்காச்செடிகளும் மென்பொருள் பொறியாளனும் ஒருவகையில் ஒன்றுதான். இரண்டு பேரும் வளர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
Month: January 2018
தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்
நீர் மூலம் ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம். நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும்…
தனையனுடன் பிறந்த தந்தை
உன் முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் – ஏனோ என் முகத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம் உளமார்ந்த அன்பிற்கு நான் பழையவன் – அதை வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன் கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை – ஆனால் நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு – மீசைக்குள்ளே உருக்கமான உள்ளமும் உண்டு உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை – ஏனோ உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை பிறந்து விட்டாய் நீ என்றறிந்ததும்…
தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி
உருட்டி வைத்த மைதா மாவு அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால்…
கற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை
கற்பாறையின் மேல் தூவப்பட்ட விதை நான். பருவமழைக்குக் காத்திருந்து பயனில்லை. என் வேர்கள் பாறையைத் துளைத்தாக வேண்டும்.