தனையனுடன் பிறந்த தந்தை

உன்  முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் – ஏனோ
என் முகத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம்

உளமார்ந்த அன்பிற்கு நான் பழையவன் – அதை
வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன்

கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை – ஆனால்
நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை

இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு – மீசைக்குள்ளே
உருக்கமான உள்ளமும் உண்டு

உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை – ஏனோ
உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை

பிறந்து விட்டாய் நீ என்றறிந்ததும் – ஒரு நொடி
மறந்து விட்டேன் இந்த உலகை

அன்று பிறந்தது நீ மட்டுமல்ல – உன்னுடன்
உனக்கொரு தந்தையும் பிறந்திருக்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்