மேதகு

அவர் காலடிகளில் காத்துக்கிடந்த பதவிகள் அத்தனை. நினைத்திருந்தால், உலகின் அனைத்துவித சுகங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து குவித்துவிடும் அளவுக்கு செல்வச்செழிப்போடு வாழ்ந்திருக்க முடியும். பெற்ற பிள்ளைகளை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்திருக்க முடியும். மனைவியோடும், பிள்ளைகளோடும் மாடமாளிகையில் காலம் கழித்திருக்க முடியும். ஆனால், காடுதான் பெரும்பாலும் அவருக்கு வீடாக இருந்தது. பிறந்த நாட்டின் விடுதலை நெருப்பு ஒன்றே அவர் நெஞ்சில் பற்றி எரிந்தது.

முதுகுக்குப் பின்னால் இந்தியா என்ற மாபெரும் துரோகத்தை சுமந்து கொண்டு, முகத்துக்கு நேரே அரக்கர்களுடன் போராட வேண்டிய கட்டாயம். இந்தியா, ஈழத்தமிழர்களுக்கு, மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆயிரம் செய்திருந்தாலும், வாழ்வின் கடைசிநாள் வரை இந்தியாவுக்கு எதிராக செயல்படும் எண்ணம் கடுகளவு கூட அவருக்கு இருந்ததில்லை. புத்தனைப் பெற்றெடுத்ததால் இந்த நாட்டுக்கு சேர்ந்த பெருமை, புகழ் அனைத்துமே என் தலைவனைக் கொன்ற ரத்தக்கறையால் அழிந்துபோனது. இந்தியா என்ற துரோக வாள் மட்டும் அவர் முதுகில் குத்தவில்லையென்றால், இலங்கை என்ற இலையை, களைபோல பிடுங்கி எறிந்திருப்பார்.

நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மனிதர்களை மட்டுமே இந்த பூமி இதுவரை பார்த்திருக்கிறது. ஆனால், பிறந்த மண்ணின் விடுதலைக்காக, தன்னையும், தான் பெற்ற பிள்ளைகளையும் பலிகொடுத்த ஒரு மாபெரும் தியாகச்செம்மலை இந்த பூமி இதுவரை கண்டதில்லை. அவரைப் பற்றி எழுத, வள்ளுவனும், இளங்கோவடிகளும், கம்பனும்தான் மீண்டும் தமிழ்நாட்டில் பிறந்துவர வேண்டும். பலர் வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடிப்பார்கள். ஆனால் என் தலைவனின் வாழ்க்கை முழுவதுமே வரலாறுதான்.

வாழ்க பிரபாகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்