நான்

நான் என்பது தனிமனிதனல்ல, சமுதாயத்தின் ஓர் அங்கம்.

சமுதாயம் என்பது மக்கள்தொகையல்ல, அறவோர் வாழும் கூட்டமைப்பு.

அறம் என்பது சட்டதிட்டமல்ல, மனதளவில் தூய்மையாய் வாழ்தல். 

மனம் என்பது மூளையின் பரிணாமமல்ல, ஐம்புலன்களின் கட்டுப்பாடு. 

ஐம்புலன்கள் என்பது சுகங்களை நுகர்வதற்கல்ல, இயற்கையின் இயல்பை உணர்ந்து போற்றுவதற்கு.

இயற்கை என்பது நம் தலைமுறை மட்டும் வாழ்ந்து தீர்ப்பதற்கல்ல, வருங்காலத்தை வாழவைப்பது. 

வருங்காலம் என்பது கனவல்ல, நிகழ்காலத்தின் தொடர்ச்சி. 

நிகழ்காலம் என்பது நிகழ்வுகளின் தொகுப்பல்ல, சந்ததிகளின் தலையழுத்து.

தலையெழுத்து என்பது விதிக்கப்பட்டதல்ல, சுற்றுப்புறச்சூழலின் இயல்புணர்ந்து செயல்படுதல்.

சுற்றுப்புறச்சூழல் என்பது மனிதர் மட்டுமல்ல, பல்லுயிர்களின் கூட்டுறவு.

பல்லுயிர்ப் பாதுகாப்பு என்பது பிறருக்கே உரியது என்பதல்ல, நான் என்றுணர்தல். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்