வந்தாரை வாழவைத்து நீமட்டும் வீழ்ந்தாய் – நம்தாய்மண்ணின் தமையர்தமை தரக்குறைவு செய்தாய் செய்ததெல்லாம் தவறென்று இன்றாவது உணர்வாய் – வீண்சாதிமத பேதம் விட்டு ஓரினமாய் இணைவாய் இணைந்த பின்பு இத்தரணியில் எதிரியேது உனக்கு – இனிபணிந்து நிற்கும் ஏழுலகும் தமிழர்தம் வாளுக்கு வாளெடுத்து வீழ்ந்ததில்லை என்றும் நம்மினமே – பெரும்தோளெடுத்து பொங்கியெழு பகைவர் அஞ்சிடவே அஞ்சுவதால் நாமடைந்த நன்மையேதும் இலையே – கண்துஞ்ச மறு தாய்நிலத்தின் விடுதலையைப் பெறவே பெற்ற மண்ணைப் பறிக்க வந்த பகைவரைக் கருவறுப்போம்…