பையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என் கையைப்பிடிச்சவளே… செரட்டயப்போல என் காதலையும் பொரட்டிப் போட்டவளே… அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே.. தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன.. ராசா மாதிரி ஊர சுத்த வச்சவளே… சென்னியப் பேத்தாலும் சும்மா இருந்தவன இன்னைக்கு வெண்ணியக் குடிக்க வச்சிட்டடி.. ஏல மக்கான்னு கூப்பிட்டவன எல்லாம் ஏம்ல இப்படின்னு பண்றான்னு கேக்க வச்ச.. கெழக்கால போற கெழடுகட்ட கூட வடக்காம போவயில வாயாற திட்ட வச்ச… பாம்பக் கண்டாலும் பயிராத…