தனையனுடன் பிறந்த தந்தை

உன்  முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் – ஏனோ என் முகத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம் உளமார்ந்த அன்பிற்கு நான் பழையவன் – அதை வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன் கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை – ஆனால் நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு – மீசைக்குள்ளே உருக்கமான உள்ளமும் உண்டு உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை – ஏனோ உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை பிறந்து விட்டாய் நீ என்றறிந்ததும்…